Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM

விழுப்புரம் மாவட்டத்தில் - விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 50 பேர் கைது :

விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காலை, மாலை இரு வேளைகளிலும் 6 மணி முதல் 7 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. அனுமதி அளிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக விழுப்புரம் காவல் உட்கோட்டத்தில் 20 வழக்குகளில் 20 பேரும், திண்டிவனம் உட்கோட்டத்தில் 13 வழக்குகளில் 13 பேரும், செஞ்சி காவல் உட்கோட்டத்தில் 9 வழக்குகளில் 9 பேரும், கோட்டகுப்பம் காவல் உட்கோட்டத்தில் 7 வழக்குகளில் 8 பேர் என 49 வழக்குகளில் 50 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x