திருப்பூரில் கல்லால் தாக்கப்பட்ட கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு : சக தொழிலாளர்கள் 2 பேர் கைது

திருப்பூரில் கல்லால் தாக்கப்பட்ட  கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு :  சக தொழிலாளர்கள் 2 பேர் கைது
Updated on
1 min read

திருப்பூர் பெரியார் காலனி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரமாக தங்கி கட்டிட வேலை செய்து வந்தவர் அன்பு (50). கடந்த 26-ம் தேதி அன்புவும், அவருடன் தங்கியிருந்த சக தொழிலாளர்களான மன்சூர் அலி (35) மற்றும் முரளிகிருஷ்ணன் (49) ஆகியோர் மது போதையில் இருந்துள்ளனர். அன்புவிடம் தங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ. 1,000 தொடர்பாக இருவரும் கேட்டுள்ளனர். இதில் பிரச்சினை எழுந்தது. ஆத்திரமடைந்த மன்சூர் அலி மற்றும் முரளி கிருஷ்ணன் ஆகியோர் அன்புவை தாக்கி, தலையில் கல்லை போட்டுவிட்டு தப்பியோடினர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அன்புவை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். புகாரின்பேரில் கொலை முயற்சி வழக்கில் மன்சூர் அலி மற்றும் முரளி கிருஷ்ணன் ஆகியோரை அனுப்பர்பாளையம் போலீஸார் கைது செய்தனர். சிகிச்சை பலனின்றி அன்பு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீஸார் மாற்றி விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in