Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM
உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் உயரம் 90 அடியாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையால், நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் எந்நேரமும் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,400 கன அடியாக இருந்தது. அணையின் நீர் மட்டம் 87.77 அடியாக உயர்ந்தது. அதனால் அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கன அடி வீதம் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறும்போது ‘நேற்று காலை 7 மணிக்கு ஆற்றில் விநாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு நேரம் செல்லச்செல்ல அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,800 கன அடியாக குறைந்தது. அதனால் ஆற்றில் திறக்கும் நீரின் அளவும் விநாடிக்கு 825 கன அடியாக குறைக்கப்பட்டது’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT