மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல் எக்ஸ்ரே பிரிவு தொடக்கம் :

மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல் எக்ஸ்ரே பிரிவு தொடக்கம் :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல் எக்ஸ்ரே பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், டயாலிசிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் புதிதாக பல் எக்ஸ்ரே பிரிவு நேற்று தொடங்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்ததுள்ளது.

புதிய பல் எக்ஸ்ரே இயந்திரத்தின் பணியை மருத்துவமனை தலைமை மருத்துவர் என். விஜயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது, "பல் எக்ஸ்ரே பிரிவில் பல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும். காலை 7.3 0மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த எக்ஸ்ரே பிரிவை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சேவை பொது மக்களுக்கு பெரிதும் உபயோகமாக இருக்கும்" என்றார்.

இதில், பல் மருத்துவர் அசோகன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in