வியர்க்குதே :

வியர்க்குதே :
Updated on
1 min read

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நவ.6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பலோபா நந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவலம்பொழில், கள்ளப்பெரம்பூர், தென்பெரம்பூர், பணவெளி, அள்ளுர், நாகத்தி, சக்கரசாமந்தம், களிமேடு, விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்சார செயற்பொறியாளர் எஸ்.பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம்

கும்பகோணம் ராஜன்தோட்டம் மற்றும் நகர துணை மின் நிலையங்களில் நவ.6-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கும்பகோணம் நகரம் முழுவதும், கெராநாட்டுகருப்பூர், செட்டிமண்டபம், மேலக்காவேரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அ.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in