கரூர் அருகே வெடிப்பொருட்களை பதுக்கிய இளைஞர் கைது :

கரூர் அருகே வெடிப்பொருட்களை பதுக்கிய இளைஞர் கைது :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் சின்னமலைபட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் சின்னராசு (33). முடி திருத்தும் தொழிலாளி. மேலும் வாணவெடி தயாரித்து வந்துள்ளார். சட்டவிரோதமாக இவர் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக மாயனூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சின்னராசு வீட்டில் இன்ஸ்பெக்டர் (பொ) மோகன் நேற்று சோதனையிட்டபோது வெள்ளை வெடி உப்பு, கரிமருந்து தூள், சாம்பல் நிற தூள், இரும்புக்குழாய், சணல் கயிறு, வெள்ளை நிற நூல், திரி கட்டு, வெள்ளை நிற திரி துண்டு ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சின்னராசு மீது வெடிபொருள் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து, வெடிப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in