Published : 04 Nov 2021 03:14 AM
Last Updated : 04 Nov 2021 03:14 AM

மான் வேட்டையாடியவர் கைது :

கடையநல்லூர் வனச்சரகம் மங்களாபுரம் பரம்பு பகுதியில் கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு கும்பல் மான் மற்றும் 2 முயல்களை வேட்டையாடியது தெரியவந்தது. அவர்களில்

ஒருவர் மட்டும் வனத்துறையினரிடம் சிக்கினார். விசாரணையில் அவர், அச்சன்புதூரைச் சேர்ந்த சொர்ணகுமார் (29) என்பது தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடியவர்கள் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் (23), அதே பகுதியைச் சேர்ந்த சாமிதுரை (29) என்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x