Published : 03 Nov 2021 03:09 AM
Last Updated : 03 Nov 2021 03:09 AM

சிவசங்கர் பாபாவுக்கு 4 வழக்கில் ஜாமீன் :

சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்குகள் உட்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் 4 வழக்குகளில் அவருக்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது.

கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து அவர் மீது போக்சோ வழக்கு உட்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவுக்கு ஒரு வழக்கில் நவம்பர் 16-ம் தேதி வரை காவலை நீட்டித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பெண்களை மானபங்கம்செய்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட 2 வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிவசங்கர் பாபா மீது உள்ள 3 போக்சோ வழக்குகளில் ஏற்கெனவே 2 வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டால் அவர் சிறையிலிருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x