Published : 02 Nov 2021 03:10 AM
Last Updated : 02 Nov 2021 03:10 AM

பார்வையற்ற மாணவர்களுக்கு சிவகங்கையில் தீபாவளி புத்தாடை :

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேவகோட்டை ஐ டொனேஷன் ஏசி அறக்கட்டளை சார்பில் பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடையை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி வழங்கினார். அருகில் அறங்காவலர் அருணாசலம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேவகோட்டை ஐ டொனேஷன் ஏசி அறக்கட்டளை சார்பில், பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி புத்தாடை களை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், ஐ டொனேஷன் ஏசி அறக்கட்டளை அறங்காவலர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறக்கட்டளை மூலம் மொத்தம் 80 மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x