புதுக்கோட்டையில் - அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு :

புதுக்கோட்டையில் -  அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு :
Updated on
1 min read

புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் செ.ஜபருல்லா தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மு.அன்பரசு உள்ளிட்டோர் பேசினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in