விவசாயியின் சடலம் கிணற்றில் மீட்பு :

விவசாயியின் சடலம் கிணற்றில் மீட்பு :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள கீழவங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(50). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நேற்று காலை சடலமாகக் கிடந்தார். தகவலறிந்த சமயபுரம் போலீஸார் அங்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, நிலப் பிரச்சினை தொடர்பான ஒரு அடிதடி வழக்கில் சிறுகனூர் போலீஸார் எதிர்தரப்புக்கு சாதகமாக நடந்துகொண்டு, கிருஷ்ணமூர்த்தியை அடித்துக் கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டதாகக் கூறி கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் சமாதானப்படுத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in