Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் :

திருச்செந்தூர் அரசு மருத்துவ மனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சு ணன், மூத்த உறுப்பினர் சு.பன்னீர் செல்வம் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர்.

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதலான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். கூடுதலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஸ்கேன் கருவியை அமைக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் மற்றும் மருத்துவ மனையின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். மருத்துவமனையில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பெ.கணேசன், சிவதானுதாஸ், கலைச்செல்வி, கிளைச் செயலாளர்கள் சோமசுந்தரம், கண்ணன், ஸ்டான்லி, காளீஸ்வரி, பிராட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x