திருப்பூரில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் :

திருப்பூரில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் :
Updated on
1 min read

திருப்பூர் மாநகர் பெருமாநல்லூர் சாலையை சேர்ந்த 7 வயது சிறுமி மற்றும் திலகர் நகர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 10 வயதுசிறுவன் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக மாநகர சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது ‘‘வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காதவாறு மக்கள்பார்த்துக்கொள்ள வேண்டும்.கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் சுற்றுப்புறத்தை வைத்துக்கொண்டாலே டெங்கு பாதிப்பு இருக்காது. மழை நீர் தேங்கும் வகையில் உள்ள பயன்பாடில்லாத டயர்கள், தேங்காய் சிரட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். திறந்தநிலை தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உருவாகாத வகையில் சுத்தமாக பராமரிக்க வேண்டும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in