திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் - மெட்ரிகுலேஷன் இணை இயக்குநர் ஆய்வு : அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுரை

திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் -  மெட்ரிகுலேஷன் இணை இயக்குநர் ஆய்வு :  அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுரை
Updated on
1 min read

தமிழக அரசின் உத்தரவுப்படி நாளை (நவ.1) முதல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட உள்ளன. இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை மெட்ரிகுலேஷன் இணை இயக்குநர் ஆனந்தி, கடந்த 29,30-ம் தேதிகளில் திருப்பூர்மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பதற்கு ஏதுவாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். இன்றும் (அக்.31) பல்வேறு பள்ளிகளில் ஆய்வு நடத்தவுள்ளார். 14 வட்டாரக் கல்வி அலுவலர்கள் 4 மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி திறப்புக்கான அறிவுரை வழங்கினார்.

பள்ளி குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு, கழிவறைகளை சுத்தம் செய்தல், வளாகத்தில் உள்ள தேவையற்றமரக்கிளைகளை அப்புறப்படுத்துதல் போன்ற தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அனைத்து விதிமுறைகளையும் பள்ளிகளில் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு இணை இயக்குநர் அறிவுறுத்தினார்.

நீலகிரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in