பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு :

பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு :
Updated on
1 min read

பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை பள்ளிபாளையம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பள்ளிபாளையம் கண்டி புதூரைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி கீதா (47). நேற்று முன்தினம் காய்கறி வாங்குவதற்காக வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அவரது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கீதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பி தலைமறை வாகினர்.

அதிர்ச்சியடைந்த கீதா பள்ளி பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in