Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM

விருதுநகர் மாவட்டத்தில் - தேவர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை :

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராஜாபாளையம் ஆண்டத்தம்மன் கொயில் தெருவில் உள்ள தேவர் சிலைக்கு தென்காசி எம்.பி தனுஷ் குமார், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ‘தெய்வம் தந்த தேச பக்தர்’ என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில், தங்கப்பாண்டியன் நூலை வெளியிட தனுஷ்குமார் எம்.பி. பெற்றுக்கொண்டார். திமுக நகர நிர்வாகிகள் ராம மூர்த்தி, மணிகண்டராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேத்தூரில் உள்ள தேவர் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் வீராச்சாமி, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையத்தில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x