Published : 30 Oct 2021 03:15 AM
Last Updated : 30 Oct 2021 03:15 AM

தேசியமய வங்கி கிளையில் தீ :

கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை நேற்று காலை திறக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள குளிர்சாதன கருவியை ஊழியர்கள் இயக்கியபோது, தீப்பிடித்து எரிந்தது.

இதனால், வங்கி முழுவதும் புகை சூழ்ந்து காணப் பட்டதால், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உடனடியாக வங்கியை விட்டு வெளியேறினர். தொடர்ந்து, வங்கி ஊழியர்களும், அப்பகுதி பொதுமக்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைந்த்தனர். தீ உடனே அணைக்கப்பட்டதால், சேதம் தவிர்க்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x