தீபாவளிக்காக : சிறப்பு பேருந்துகள் : இயக்கம் :

தீபாவளிக்காக : சிறப்பு பேருந்துகள் : இயக்கம்  :
Updated on
1 min read

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வேலூர் மண்டலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மண்டல அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நவ.1 முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதில், வேலூரில் இருந்து பெங்களூருவுக்கு 10, ஓசூருக்கு 20, திருச்சிக்கு 10, தருமபுரிக்கு 5, சென்னைக்கு 75 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணி களின் கூட்டத்தை பொருத்து மேற்கண்ட நகரங்களில் இருந்து தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஆற்காடு, வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, திருப்பத்தூர், தருமபுரி, ஓசூர் மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

தீபாவளிக்கு பிறகு நவ.5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு நகரங்களில் இருந்து பெங்களூருவுக்கு 20, ஓசூருக்கு 30, சென்னைக்கு 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன’’ என தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in