சென்னை ரவுடி திருச்சியில் கைது :

சென்னை ரவுடி திருச்சியில் கைது :
Updated on
1 min read

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(40). இவர், ஆந்திராவிலிருந்து 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக எண்ணூர் அருகே அண்மையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் தனிப்படை போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் திருவெறும்பூர் கோகுல் நகரில் தனிப்படை போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன்(40), இவரது கூட்டாளிகள் சசிக்குமார்(24), மதிவாணன்(26) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள தனசேகரனின் கூட்டாளிகள் அம்பத், கட்டை ரவி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகரன் மீது 7 கொலை உள்ளிட்ட 40 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in