Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM

மா., கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரியில் உள்ள இரண்டாவது மண்டல அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். ஆர்ப் பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன் தொடங்கி வைத்தார்.

இதில், பங்கேற்றவர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், தெருக்களில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும், சாலைகளின் தரத்தை சோதனை செய்ய வேண்டும், சத்துவாச்சாரி-காங் கேயநல்லூர் இடையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தயாநிதி, மாவட்ட குழுவை சேர்ந்த நாகேந்திரன், பரசுராமன், குப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x