Published : 28 Oct 2021 03:08 AM
Last Updated : 28 Oct 2021 03:08 AM

காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை : அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் அஞ்சலி

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடந்த மருதுபாண்டியர்கள் குருபூஜை யில் அரசியல் கட்சியினர், சமுதாயத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

காளையார்கோவிலில் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் அவருக்கு குருபூஜை நடந்தது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் தலைமையில் யாக பூஜை நடந்தது. தொடர்ந்து பெண்கள் பால்குடம் எடுத்து அஞ்சலி செலுத்தினர். சிலர் பறவைக் காவடி எடுத்து வந்தனர்.

 ஹரிஹர  ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், செந்தில்நாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ நாகராஜன், எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் கருணாகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜா, ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி,

திமுக சார்பில் எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், காளையார்கோவில் ஒன்றியச் செயலாளர்கள் ஆரோக்யசாமி, யோககிருஷ்ணகுமார், அமமுகவின் தென்மண்டலப் பொறுப்பாளர் உமாதேவன், மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, பாஜக சார்பில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் தர்வாண்டையார், மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் சேதுராமன் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x