Published : 28 Oct 2021 03:08 AM
Last Updated : 28 Oct 2021 03:08 AM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.14 அடியாக உயர்வு :

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.14 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37 ஆயிரத்து 162 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 37 ஆயிரத்து 162 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் 102.79 அடியாக இருந்த நீர்மட்டம், ஒரே நாளில் 2 அடிக்கு மேல் உயர்ந்து நேற்று 105.14 அடியானது. நீர் இருப்பு 71.66 டிஎம்சி-யாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x