மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகளுக்கு வீரர்கள் தேர்வு :

மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகளுக்கு வீரர்கள் தேர்வு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் நடத்தப்படவுள்ள 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகளுக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அக்.30-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் குழுக்களாகவோ அல்லது தனிநபராகவோ கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புபவர்கள் 1.1.2002-க்கு பின்பு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

வரும்போது அவசியம் வயதுச் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் வீரர்,வீராங்கனைகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அரியலூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகச் செயலாளர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in