Published : 27 Oct 2021 03:10 AM
Last Updated : 27 Oct 2021 03:10 AM

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது :

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள சூரப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (24). இவர் கடந்த ஆக. 15-ம் தேதி புளியம்பட்டி பிரிவு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் மேலகோவில்பட்டியைச் சேர்ந்த பிரவீன்குமார் (31), சூரப்பநாயக்கனூரை சேர்ந்த சண்முகவேல் (31) உள்ளிட்ட 5 பேரை அரவக்குறிச்சி போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைந்தனர்.

இந்நிலையில் எஸ்.பி ப.சுந்தரவடிவேல் பரிந்துரையில், ஆட்சியர் த.பிரபுசங்கர் மேற்கண்ட இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க நேற்று உ த்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x