

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 63.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலை வேளையில் வெயிலும், மாலை மற்றும் இரவில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மழையளவு விவரம் மில்லி மீட்டரில்:
கவுந்தப்பாடி 63.8, எலந்தைக் குட்டை மேடு 26, மொடக்குறிச்சி 18, கோபி 12, அம்மாபேட்டை 11, குண்டேரிப் பள்ளம் 10, நம்பியூர் 9, பவானிசாகர் 6.
பவானிசாகர் அணை
நாமக்கல்லில் மரங்கள் முறிந்தன