திருச்சி அருகே வெவ்வேறு இடங்களில் - மின்னல் தாக்கி பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு :

திருச்சி அருகே வெவ்வேறு இடங்களில் -  மின்னல் தாக்கி பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

திருச்சி அருகே நேற்று இரு வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

கடலூர் திட்டக்குடியைச் சேர்ந்த வீரமுத்து மகன் வேலாயுதம் (60), பாண்டு மகன் சங்கர் (45). உள்ளிட்ட சிலர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள பத்தாளப்பேட்டை புத்தாம்பூரில் தங்கி விவசாய கூலி வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில், இவர்கள் நேற்று பத்தாளப்பேட்டையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே வேலாயுதம் உயிரிழந்தார். காயமடைந்த சங்கர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் இந்தலூர் ஊராட்சியைச் சேர்ந்த சின்னையன் மகள் ரங்கம்மாள் (48), திருவெறும்பூர் அருகேயுள்ள கிளியூரில் நேற்று வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் ரங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 பேருக்கு காது பாதிப்பு

இதையடுத்து அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை ரங்கம் எம்எல்ஏ எம்.பழனியாண்டி, அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி ஆகியோர் நேற்று சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

மீனவர் உயிரிழப்பு

நள்ளிரவு 1 மணியளவில் மல்லிப்பட்டினத்தில் இருந்து கிழக்கே 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இதில், திடீரென மின்னல் தாக்கியதில் ஃபைபர் படகை இயக்கிக் கொண்டிருந்த கருப்பையா(37) படுகாயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலத்துடன் சக மீனவர்கள் நேற்று அதிகாலை மல்லிப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in