கரும்பு அரவை தொடங்க வேண்டும் :

கரும்பு அரவை தொடங்க வேண்டும் :
Updated on
1 min read

சேத்தியாதோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கி னார். துணைத்தலைவர் ஞான சபாபதி, ரங்கசாமி, கோபிநாத், தேவராஜன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்ஆதிமூலம் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு பேசினார். இதில் நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே ஆலை அரவை தொடங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in