Published : 25 Oct 2021 03:10 AM
Last Updated : 25 Oct 2021 03:10 AM

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் :

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ஆர்.ராஜ்கிரணை கொலை செய்த இலங்கை கடற்படையைக் கண்டித்தும், சிறைபிடித்துள்ள 2 மீனவர்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோட்டைப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டைப்பட்டினம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹூமாயுன் கபீர் தலைமை வகித்தார்.

இதில், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது, ராஜ்கிரணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x