சிவகங்கை மாவட்டத்தில் - 7 ஊராட்சித் துணைத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு :

சிவகங்கை மாவட்டத்தில்  -  7 ஊராட்சித் துணைத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் 7 ஊராட்சித் துணைத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்புவனம் ஒன்றியம் பழையனூர் ஊராட்சியில் வீரணன், கணக்கன்குடியில் காளிமுத்து, பாப்பாகுடியில் பழனிவேல், கல்லல் ஒன்றியம் செம்பனூரில் பிரான்சிஸ் மேரி, கண்ணங்குடி ஒன்றியம், திருப்பாக்கோட்டையில் ராஜா,

தேவகோட்டை ஒன்றியம் எழுவன்கோட்டையில் பசாரியா, காளையார்கோவில் ஒன்றியம், சேதாம்பலில் நாகேஸ்வரன் ஆகியோர் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டி நடந்த திருப்புவனம் ஒன்றியம் தூதை ஊராட்சியில் தனசேகரன், மானாமதுரை ஒன்றியம் அன்னவாசல் ஊராட்சியில் கவிதா, கீழப்பிடாவூர் ஊராட்சியில் அன்புக்கரசி ஆகியோர் துணைத் தலைவர்களாக வெற்றி பெற்றனர். இத்தகவலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in