மின்னல் தாக்கி மீனவர் மரணம் :

மின்னல் தாக்கி மீனவர் மரணம் :
Updated on
1 min read

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி 50 வீடு காலனியைச் சேர்ந்த அந்தோணி பாஸ்கர் மகன் அந்தோணி ஜெசுலர் (29). இவர் நேற்று முன்தினம் வெள்ளப்பட்டியில் இருந்து தனது சகோதரர் சதீஷ் என்பவருடன் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். அவர்கள் மீன் பிடித்துவிட்டு நேற்று காலை 7 மணியளவில் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

வெள்ளப்பட்டியில் இருந்து சுமார் 3 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கடலில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. எதிர்பாராதவிதமாக படகில் இருந்த அந்தோணி ஜெசுலர் மீது மின்னல் தாக்கியது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in