Published : 22 Oct 2021 03:08 AM
Last Updated : 22 Oct 2021 03:08 AM

ஊரக வேலை திட்ட பணியாளர்களை கொட்டிய தேனீக்கள் :

சோளிங்கர்

சோளிங்கர் அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்துகொண்டிருந்த பெண்களை தேனீக்கள் கொட்டியதால் பலர் காய மடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன பரவத்தூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கால்வாய் தூர்வாரும் பணி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது. அருகில் இருந்த அரசமரத்தில் இருந்து மலைத் தேனீக்கள் திடீரென வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை கொட்டத் தொடங்கியது. இதில், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், ஆட்டோக்கள் மூலம் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ரத்தினம் (47), சுப்பிரமணி (60), பாண்டுரங்கன் (55), ஏழுமலை (75), அமிர்தம் (60), அமுதா (40), லோகாம்பாள் (62) ஆகிய 7 பேர் மட்டும் 108ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x