தற்கொலை என கருதப்பட்ட வழக்கில் திருப்பம் - நகைக்காக வயது முதிர்ந்த தம்பதியர் படுகொலை : மடுகரையைச் சேர்ந்தவர் கைது

அருள்ராஜ்.
அருள்ராஜ்.
Updated on
1 min read

கண்டமங்கலம் அருகே பெரியபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வர்கள் ரங்கநாதன் (82), அவரது மனைவி பொற்கலை (75). இவர்கள் தனியாக வசித்து வந்தனர்.இத்தம்பதியினருக்கு லோகநா தன் என்ற மகன், ஜெயா, சரோஜினி, சிவகாமி என்ற 3 மகள்கள்உள்ளனர். இவர்கள் அனைவரும் புதுச்சேரியில் வெவ்வேறு பகுதி யில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்காலை நீண்ட நேரம் கடந்தும் வீட்டின் கதவு திறக்காமல் இருந் தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, இருவரும் இறந்த நிலையில் கிடந் தனர். அவர்கள் அருகே எறும்பு கொல்லி விஷபாட்டில் கிடந்தது.

இத்தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸார் இருவரின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்க லாம் என முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்தது. ஆனால் பிரேதபரிசோதனை அறிக்கையில் அவர் கள் குரல்வளை நெறிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்தது.

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் புதுச்சேரி, மடுகரையைச் சேர்ந்த அருள்ராஜ் (35) என்பவர் நகைகளை திருடுவதற்காக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இருவரின் கழுத்தைநெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அருள்ராஜை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து பொற் கலையின் நகைகளை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in