Published : 21 Oct 2021 03:08 AM
Last Updated : 21 Oct 2021 03:08 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு :

தி.மலை மாவட்டத்தில் 65 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

தி.மலை மாவட்டத்தில் காலியாக இருந்த 66 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இதற்கான மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் 5 கிராம ஊராட்சி தலைவர்கள், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 31 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கூனம் பாடி கிராம ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிட மனுத் தாக்கல் செய்யாததால் தேர்தல் நடைபெறவில்லை.

மீதமிருந்த 34 பதவிகளுக்கு தேர்தல் நடத்தபட்டு கடந்த 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர் களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. இதில், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் 10-வது வார்டு கவுன்சிலராக என்.வி.பாபு, பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் 12-வது வார்டு கவுன்சிலராக லட்சுமி, புதுப் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் 11-வது வார்டு கவுன்சிலராக லட்சுமி ஆகியேர் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x