திருப்பூரில் மிலாடி நபி விழா ஊர்வலம் :

திருப்பூரில் மிலாடி நபி விழா ஊர்வலம் :
Updated on
1 min read

திருப்பூர் கோம்பைத் தோட்டம் காயிதே மில்லத் நகர் பகுதியில் உள்ள ஹிஸ்னுல் இஸ்லாம் சுன்னத் வல் ஜமாத் சார்பில், நபி புகழ்பாடும் பேரணி நடைபெற்றது. ஹிஸ்னுல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலின் தலைமை இமாம் அப்துல்லா பாக்கவி பிரார்த்தனை செய்தார். பேரணியை பள்ளிவாசலின் தலைவர் சலீம் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் இருந்தும் ஏராளமான சிறுவர், சிறுமிகள் பங்கேற்று, அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை விரும்ப வேண்டும், அமைதியை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். நிறைவில் கூட்டுபிரார்த்தனை செய்து, குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in