Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

வரும் 23-ம் தேதிக்குள் போனஸ் வழங்க பனியன் தொழிலாளர்கள் தீர்மானம் :

பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் (எம்.எல்.எப்) போனஸ்பேரவை சிறப்புக் கூட்டம், திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நாகராஜ், பஞ்சாலை சங்க மாவட்டச் செயலாளர் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

நிட்டிங், பிரிண்டிங், டையிங், பிளீச்சிங், எம்ப்ராய்டரிங், காம்பேக்டிங்,டைம் ரேட், பீஸ் ரேட்டில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வரும் 23-ம் தேதிக்குள்50 சதவீத போனஸ் வழங்க வேண்டும். புதிய சம்பள ஒப்பந்தப்படி அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு, அவரவர் ஊர்களுக்கு செல்ல அந்தந்த நிறுவனங்கள் வாகன வசதி செய்து தர வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x