கல்லல் அருகே சாலையோரம் பெண் குழந்தையை வீசிய தாயாரிடம் அதிகாரிகள் விசாரணை :

கல்லல் அருகே சாலையோரம் பெண் குழந்தையை வீசிய  தாயாரிடம் அதிகாரிகள் விசாரணை :
Updated on
1 min read

கல்லல் அருகே கூத்தலூரில் இருந்து நாகவயல் செல்லும் சாலையில் பாலம் அருகே பிறந்து 10 மணி நேரமே ஆன பெண் குழந்தை துணியில் சுற்றியவாறு அக்.16-ம் தேதி கிடந்தது. அக்குழந்தையை அவ்வழியாகச் சென்ற அனிதா என்பவர் மீட்டு எஸ்.ஆர்.பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தார். அக்குழந்தைக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அக்குழந்தையின் தாயாரே மற்றொருவருடன் சேர்ந்து சாலையோரத்தில் வீசிவிட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கூத்தலூரைச் சேர்ந்த குழந்தையின் தாயாரிடம் கிராம நிர்வாக அலுவலர் அருள், சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in