Regional02
நச்செள்ளை தமிழ்ப் பேராயம் சமூக சீர் விழா :
கரூர் மாவட்டம் நச்செள்ளை தமிழ்ப்பேராயம் சார்பில், கடவூர் அருகேயுள்ள ராஜலிங்கபுரம் காலனியில் சமூக சீர் விழா அண்மையில் நடைபெற்றது. மாணவர்களுக்கு வாசிப்பை மேம்படுத்தும் புத்தக கலந்துரை யாடல் பயிற்சி, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகளும் அளிக்கப்ப ட்டன. விழா முடிவில் மாணவர் களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
நச்செள்ளை பொறுப்பாளர் கள் பேச்சாளர் பூ.ரவிக்குமார், கருவை கவிஞர் ந.சுடாலின், கவி.கோ.பிரியதர்ஷினி, வாசகர் கோகுல், சுப்பிரமணியன், சசிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
