கோழி இறைச்சி கடை உரிமையாளர் கொலை :

கோழி இறைச்சி கடை உரிமையாளர் கொலை :
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே மேலக்கொண்டையார் ஊராட்சிக்கு உட்பட்ட கரையான்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (26). இவர் திருவள்ளூர், பூங்காநகர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார்.

மேலும், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவன சேமிப்பு கிடங்கில் பகுதி நேர ஊழியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கடையிலிருந்து இரவு வீடு திரும்பும் போது, மர்ம நபர்கள் ஜெகதீசனை வழிமறித்து கொலை செய்து முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

வெங்கல் போலீஸார், ஜெகதீசன் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in