காவலருக்கு எஸ்பி பாராட்டு :

காவலருக்கு எஸ்பி பாராட்டு :
Updated on
1 min read

திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் பிரபல துணிக்கடை செயல்பட்டு வருகிறது. திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருக்கு துணி எடுக்கச்சென்றுள்ளார். அப்போது, கடைக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் தவறவிட்ட ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியைப் பார்த்த ராதாகிருஷ்ணன், அதனை மீட்டு தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தங்கச் சங்கிலியை தவறவிட்ட திருப்பூர் வாலிபாளையத்தை சேர்ந்த பழனியப்பனின் மனைவி தேவியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. நகையை உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவிய காவலர் ராதாகிருஷ்ணனுக்கு மாநகர காவல் ஆணையர் வி.வனிதா உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in