போக்ஸோ : சட்டத்தின் கீழ் 2 பேர் கைது :

போக்ஸோ : சட்டத்தின் கீழ் 2 பேர் கைது :
Updated on
1 min read

மயிலாடுதுறையை அடுத்த பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி மகன் பிரசன்னா(21), ஹோட்டல் தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, சிறுமியின் தாயார் நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பிரசன்னாவை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் எம்.சந்திரசேகர் (40). இவர், 15 வயது சிறுமிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சந்திரசேகரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in