Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

அதிமுக பொன்விழா கொண்டாட்டம் :

அதிமுகவின் 50-வது ஆண்டு தொடக்க விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி, வைகுண்டம், திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொன் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பு அலங்கரிக் கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். நல உதவிகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று அதிமுக மாநில அமைப்புச் செய லாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு ஆரல்வாய்மொழி நகர அவைத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சாந்தினி, துணைத் தலைவர் ஷேக், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x