நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் பணியாளர் கொலை :

நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் பணியாளர் கொலை :
Updated on
1 min read

திருநெல்வேலி அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பிச்சையா மனைவி மாரியம்மாள் (44). திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாரியம்மாள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். ஆனால்,அப்பணிக்கு செல்ல வேண்டாம் என்று மாரியம்மாளிடம் பிச்சையா தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மாரியம்மாள் அரிவாளால் வெட்டப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in