Published : 16 Oct 2021 06:14 AM
Last Updated : 16 Oct 2021 06:14 AM

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை - புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ரூ.2.25 கோடி இலக்கு :

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத் தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் கவிதா ராமு நேற்று இரவு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:

சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சி புரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், திருபுவனம் பட்டு சேலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்களும் விற்பனைக்கு உள்ளன.

இந்நிலையத்தில் கடந்த தீபாவளிக்கு ரூ.92.70 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழ் ஆண்டு தீபாவளிக்கு ரூ.2.25 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. மேலும், ‘கனவு நனவு திட்டம்’ எனும் சேமிப்பு திட்டத் தையும் செயல்படுத்தி வருகிறது.

எனவே, பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, கோ-ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்ச வேணி, நகராட்சி ஆணையர் நாகராஜன், முதுநிலை மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) இரா.சீனிவாசன், துணை மண்டல மேலாளர் (நிர்வாகம்) மு.அன் பழகன், முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பெ.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x