கரூரில் 16 பவுன் நகைகள் திருட்டு :

கரூரில் 16 பவுன் நகைகள் திருட்டு :

Published on

கரூர் தாந்தோணிமலை அருகேயுள்ள முத்தலாடம் பட்டி முல்லை நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (36). இவர் கடந்த 13-ம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்து பதினைந்தே முக்கால் பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம், 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in