பள்ளிகளில் வித்யாரம்பம் :

பள்ளிகளில் வித்யாரம்பம் :
Updated on
1 min read

திருநெல்வேலியில் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாளையங்கோட்டை மகாராஜ நகர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஜெயேந்திராபள்ளி குழுமங்களின் இயக்குநர் ஜெயேந்திரன் மணி, பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம்சிபிஎஸ்இ பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் பூஜை நடைபெற்றது. பள்ளி தாளாளர் துரைசாமி,முதல்வர் ஈனோஷ் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அரிசியில் எழுதச்செய்து பள்ளியில் சேர்த்தனர். இதுபோல் பல்வேறு பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in