Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM

மூதாட்டியிடம் : 8 பவுன் நகை பறிப்பு :

ஆரணியில் மூதாட்டியிடம் 8 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ஆரணி நகரம் சைதாப் பேட்டை அண்ணாநகரில் வசிப்பவர் லட்சுமி(76). இவர், அதே பகுதியில் வசிக்கும் செண்பக வள்ளியுடன் கோயிலுக்கு கடந்த 13-ம் தேதி சுவாமி தரிசனம் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

அப்போது அவர்களை இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பின் தொடர்ந்து வந்த 2 பேர், லட்சுமியின் கழுத்தில் இருந்த 8 பவுன் நகையை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். இது குறித்து ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x