Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

மல்லப்பாடியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

கிருஷ்ணகிரி

பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணை செயலாளர் செல்வம் தலைமை வகித்தார்.

வட்டத் தலைவர் திருப்பதி மற்றும் விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் கண்ணு ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கவுரையாற்றினர். அதில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 100 நாள் வேலைப் பற்றி விமர்சித்ததைக் கண்டித்தும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். வட்டச் செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார். இதில், 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x