Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

இரு சக்கர வாகன விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு :

உத்தமபாளையம்

கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இருவர் வந்த பைக், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேரும் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அருகே அழகாபுரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் மணி (21), நாகராஜ் (21). இருவரும் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தனர்.

கல்லூரிக்கு சென்ற இருவரும் இரு சக்கர வாகனத்தில் நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வைகை நாற்றுப்பண்ணை அருகே வந்தபோது நிலை தடுமாறிய வாகனம் அருகில் உள்ள மரத்தில் மோதியது.

இதில் அதே இடத்தில் இருவரும் உயிரிழந்தனர். ஓடைப்பட்டி காவல் ஆய்வாளர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x