Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் சமூகம் சார்ந்த மருத்துவத் துறை சார்பில், உலக கைகழுவும் தினம் கொண்டாடப்பட்டது.
டீன் நேரு தலைமை வகித்தார். கைகழுவும் முறைகள் குறித்தும், கைகழுவுவதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன், அனைவருக்கும் சுகாதார கல்வியாளர் சங்கரசுப்பு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சக்தி வித்யாலயா பள்ளி
தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி முதல்வர் ஜெயா சண்முகம் தலைமை வகித்தார். துணை முதல்வர் ரூபி ரத்ன பாக்கியம் வரவேற்றார். மருத்துவர் கிரேஸி பவுலின் பேசினார். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT