Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :

தென்காசி : தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பரமேஷ் (5). இவர், அப்பகுதியில் உள்ள இரட்டை குளத்துக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நீண்ட நேர தேடுதலுக்கு பின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சுரண்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x